இடுகைகள்

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது?

படம்
             சீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் 1072 பேர் கடுமையான காய்ச்சல் , இருமல் , தும்மலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . சீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் 1072 பேர் கடுமையான காய்ச்சல் , இருமல் , தும்மலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .                                                 அந்த 1072 பேரையும் காப்பாற்ற சீன டாக்டர்கள் குழு போராடி வருகிறது . எந்த தடுப்பு மருந்துக்கும் கட்டுப்படாமல் கொரோனா வைரஸ் தீவிரமாக செயல்படுவதால் டாக்டர்கள் திகைத்துள்ளனர் .                                                                                                                                 கொரோனா வகை வைரஸ்கள் வரிசையில் இதுவரை 6 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .   அந்த 6 வகை வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன .       ஆனால் தற்போது சீனாவில் பரவி இருப்பது கொரோனாவின் 7- வது வகை புதிய வைரசாகும் . இந்த 7- வது வைரஸ் சற்று அதிக

ஜிம் போகாமல், உடம்பை ஃபிட்டா வச்சுக்க சூப்பர் வழிகள்

படம்
உடம்பை ஒல்லியாக்க, ஃபிட்டாக வைத்திருக்க ஜிம் போகவேண்டும் என்ற அவசியமில்லை. ஜிம்முக்கு போகாமல் உடலை ஃபிட்டாக வைத்திருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். ஜிம் போகாமல், உடம்பை ஃபிட்டா வச்சுக்க சூப்பர் வழிகள் உடம்பை ஒல்லியாக்க, சிக்ஸ் பேக் வைத்து தசை அதிகம் பெற ஜிம்மில் நிச்சயம் உறுப்பினர் ஆக வேண்டும். ஆனால் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம் தேவையில்லை. இதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம். மிக எளிதாக செய்யக்கூடிய அற்புத பலன் தரும் உடற்பயிற்சி. இதற்கு எந்தவொரு உபகரணங்களும், ஸ்பெஷல் ஷூக்களும், ஆடைகளும் தேவையில்லை. ஒரு தூய்மையான தரையில், படுக்கை விரிப்பு இருந்தால் மட்டும் போதும். யோகா செய்வதற்கு கைதேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. எளிய செய்முறைகளை பின்பற்றினாலே போதும். புத்தகங்கள் அல்லது ஆன்லைன் வீடியோக்கள் மூலம் பாடி ஸ்டெரெச்சிங், எளிய அசைவுகள் மட்டும் கற்றுக் கொண்டால் போதுமானது. ஆன்லைனில் இலவச யோகா வகுப்புகளும் இருக்கின்றன. இதனை நீங்கள் ஓய்வாக இருக்கும் தருணங்களில் கற்றுக் கொள்ளலாம். யோகா மூலம் உடல் இலகுத்தன்மை பெற்று, தசைகள் வலிமை பெறுகின்றன. உங்க

காரமான உணவை பலர் விரும்புவது ஏன்?

படம்
உலகில் பெரும்பாலானோர் காரசாரமான உணவுகளை ருசிப்பதை விரும்புகின்றனர். இதன் சுறுசுறுப்பான சுவை பலரையும் கவர்கிறது. காரமான உணவை பலர் விரும்புவது ஏன்? உலகில் பெரும்பாலானோர் காரசாரமான உணவுகளை ருசிப்பதை விரும்புகின்றனர். இதன் சுறுசுறுப்பான சுவை பலரையும் கவர்கிறது. ஏறக்குறைய எல்லா நாட்டு மக்களும் வேறுபாடின்றி காரத்தை விரும்புகின்றனர். உலக அளவில் ஒரு நபர் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக ஏறத்தாழ 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சில நாடுகளில் மிளகாய் சாப்பிடும் அளவு, மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது. துருக்கியில் மக்கள் தினம் 86.5 கிராம் மிளகாய் சாப்பிடுகிறார்கள். இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவு. காரமான உணவுகளுக்குப் பிரசித்தி பெற்ற மெக்சிகோவில் இது 50.95 கிராமகளாக உள்ளது. அதைவிட மிக அதிகமான காரத்தை துருக்கி மக்கள் சாப்பிடுகிறார்கள். ஆக, காரமான உணவுகளை நாம் ஏன் விரும்புகிறோம்? காரம் நமக்கு ஏற்படுத்தும் திரில் உணர்வு உள்ளிட்டவை அதற்கான காரணங்களாக இருக்கின்றன. மிளகாய்க்கு காரமான தன்மையைத் தரும் கேப்சாய்சின் என்ற ப

கண் பார்வை குறைய என்ன காரணம்?

படம்
இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும். நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்! கண் பார்வை குறைய என்ன காரணம்? எந்த ஒரு பொருளும் சரியாக பராமரித்தால் பல காலம் சிறப்பாக இயங்கும். வீட்டில் புதிய டிவி வாங்கியவுடன் அதனை தினமும் தூசிபடியாமல் துடைத்து வைக்கின்றோம். 24 - மணிநேரமும் பார்ப்பதில்லை. சூடாகிவிடும். அதனால் அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். எவ்வளவு வோல்ட் மின்சாரம் பாய வேண்டுமோ அந்த அளவு மின்சாரம் கொடுக்கின்றோம். ஆனால் நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்! * குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது. * இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும். * மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும். * உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும். * பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும். * அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம

ஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்

படம்
தொடர்ந்து அதிக நேரம் ஏ.சியில் இருப்பதால் சருமம் வறட்சி அடைகிறது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம். ஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள் அலுவலகம் செல்லும் பெண்கள் தொடர்ந்து 9 அல்லது 10 மணி நேரம் வரை ஏசிக் காற்றிலே இருப்பதால், சருமத்துடன் சேர்ந்து கூந்தல், உதடுகள் ஆகியவையும் பாதிக்கப்படும். இதனால், சீக்கிரமே வயது முதிர்ந்த தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அதைத் தடுக்க சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால், சருமம் அழகு பெறும். ஏசியில் பணியாற்றும் பெண்கள், தங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர்கள் பயன்படுத்துவது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருந்தால், சரும வறட்சி, மங்கலாக்கிப் பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்து தப்பிக்கலாம். உங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை ஹேண்ட்பேக்கில் வைத்திருங்கள். இதனை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அல்லது சருமம் உலர்வாகத் தோன்றும் சமயத்திலோ எடுத்து அப்ளை செய்யுங்கள். ஏசி பயன்பாட்

கீரைகள்...

படம்
யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு தகவல்... கீரைகள்... அன்று நூறு வயதை தாண்டியும் ஊள்றுகோல், கண் கண்ணாடி, காது கருவி, தலைக்கு கருப்புசாயம், தேடாத முன்னோர்கள் பலர். இன்றைய சர்க்கரை, பல் சொத்தை, ஆண்மை குறைவில்லாத நிலை, மூட்டுவலி இன்னும் விதவிதமான வியாதிகள் இல்லாமல் உடலை வளர்த்தார்களே அவர்கள். எப்படி??? காரணம், நம்மை சுற்றியே அன்றும் இன்றும் என்றும் ஆரோக்கியம் தந்த அற்புதமாக தானாக வளரும் கீரைகளே. நாம் தான் அதை இன்று உள்ள சோம்பேறித்தனத்தால் தேடுவதில்லை. பொதுவாக கீரைகள் என்று தனியாக பூமியில் முளைப்பதில்லை. நம்மைச்சுற்றியுள்ள தமிழ் நிலத்திலுள்ள மூலிகைகள் பலவற்றையும் கீரைகளாக காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள். நஞ்சுத்தன்மை இல்லாத சுவைதரக்கூடிய அனைத்துமே கீரைகள்தான். மேலும் அவற்றில் சுவை, மணம் சேர்ப்பதும், பருவநிலைக்கு தகுந்தாற்போல அவற்றை உபயோகிப்பதும் நமது திறமையே. கீரைகளில் சில..... 1. பொன்னாங்கண்ணி கீரை 2. ஆரைக் கீரை 3. குறிஞ்சாக் கீரை 4. தாளி கீரை என்ற நறுந்தாளி கீரை 5. முசுட்டை கீரை 6. குமுட்டி கீரை 7. மின்னக்கீரை என்ற முன்னை கீரை 8. முருங்கை கீரை 9.

உணவின் பலன்கள்

1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.  எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும். 2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர்  சாப்பிடக்கூடாது. 3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும்.  சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும். 4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. 5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன்  பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. 6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும். 7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது. 8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. 9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. 10.)நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.